தனித்தனி சம்பவத்தில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை

தனித்தனி சம்பவத்தில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-12-22 22:00 GMT
பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அருகே உள்ள ஓமிப்பேர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 58), விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வடிவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரம்மதேசம் அருகே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(50). சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏழுமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்த தனித்தனி புகார்களின் பேரில் பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து, வடிவேல் மற்றும் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்