கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை கோயம்பேடு நெற்குன்றம், புவனேஸ்வரி நகர், வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-30 21:45 GMT
பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு நெற்குன்றம், புவனேஸ்வரி நகர், 10-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்(வயது 51). இவர், சின்மயா நகரில் உள்ள வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவருடைய மகள் மனோதர்சினி(18). இவர், கிண்டியில் உள்ள கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை மனோதர்சினி, வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறினர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், மாணவி மனோதர்சினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி மனோதர்சினியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்