நாகை அருகே சாராயம் கடத்திய 5 பேர் கைது

நாகை அருகே சாராயம் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-05 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் படியும் மது குற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நாகை மாவட்ட தனிப்படையினர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில், போலீசார் கீழ்வேளூரை அடுத்த பெருங்கடம்பனூர் ஆலமரம் சுடுகாடு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்த மில்லடி தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தங்கபாண்டியன் (வயது 36), அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மகன் சக்திவேல் (23), கார்த்திகேயன் (27), ராமர்மடம் ஜீவாநகரை சேர்ந்த பாலு மகன் கவியரசன் (23), ஜீவா தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணிகண்டன் (24) ஆகியோர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 550 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்