பள்ளி வேன் மீது மொபட் மோதல்: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி நண்பர் படுகாயம்
சமயபுரத்தில் பள்ளி வேன் மீது மொபட் மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
சமயபுரம்,
திருச்சி துவாக்குடிமலை வ.உ.சி. நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் நவீன்குமார்(வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் நந்தகுமார் (19) என்பவரும் நண்பர்கள். இருவரும் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தனர்.
2 பேரும் திருச்சியிலிருந்து கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை பஸ்சை தவற விட்டதால் மொபட்டில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். நவீன்குமார் மொபட்டை ஓட்ட பின்னால் நந்தகுமார் அமர்ந்திருந்தார்.
சாவு
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பழைய பெட்ரோல் பங்க் அருகே அவர்கள் சென்றபோது முன்னால் சென்ற பள்ளி வேன் மீது எதிர் பாராத விதமாக மொபட் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். நந்தகுமார் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவர் லால்குடி அருகே உள்ள நரிமேடு கோவில் தெருவை சேர்ந்த தெய்வநாதன் என்பவர் மகன் லியோ (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி துவாக்குடிமலை வ.உ.சி. நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் நவீன்குமார்(வயது 22). இவரும், அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் நந்தகுமார் (19) என்பவரும் நண்பர்கள். இருவரும் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தனர்.
2 பேரும் திருச்சியிலிருந்து கல்லூரி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை பஸ்சை தவற விட்டதால் மொபட்டில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். நவீன்குமார் மொபட்டை ஓட்ட பின்னால் நந்தகுமார் அமர்ந்திருந்தார்.
சாவு
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பழைய பெட்ரோல் பங்க் அருகே அவர்கள் சென்றபோது முன்னால் சென்ற பள்ளி வேன் மீது எதிர் பாராத விதமாக மொபட் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். நந்தகுமார் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவர் லால்குடி அருகே உள்ள நரிமேடு கோவில் தெருவை சேர்ந்த தெய்வநாதன் என்பவர் மகன் லியோ (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.