ஆண்டிமடம் அருகே சாலையில் தீக்குளித்த வாலிபர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதில் இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தன்னை தாக்கியதால் மன உளைச்சலில் தனது உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தானே தீ வைத்துக்கொண்டார்.

Update: 2019-01-12 22:15 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள காங்குழி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கார்த்திக்(வயது 25). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகை தாக்கிய அதே ஊரை சேர்ந்த ஜெயமூர்த்தி, கண்ணதாசன், மணிவண்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் பொது இடத்தில் தன்னை தாக்கியதால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் ஆண்டிமடத்தில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் தனது உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தானே தீ வைத்துக்கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்