மணவாளக்குறிச்சி அருகே விஷம் குடித்ததை நண்பர்களுக்கு செல்போனில் தெரிவித்த கொத்தனார் - ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பலியான சோகம்

விஷம் குடித்ததை செல்போனில் தெரிவித்த கொத்தனார், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-19 23:00 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே விஷம் குடித்ததை செல்போனில் தெரிவித்த கொத்தனார், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை கருங்காலிவிளை பகுதியை சேர்ந்தவர் சின்ன நாடார். இவருடைய மகன் சுதன் (வயது 27). கொத்தனார்.

நேற்றுமுன்தினம் இவர் மனம் உடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் முட்டம் செங்குழி பகுதியில் நின்ற போது அவர் திடீரென விஷம் குடித்து விட்டார். பின்னர், தன்னுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அவசர கதியில் தான் விஷம் குடித்து விட்டதாகவும், தன்னை காப்பாற்றும்படியும் கூறியுள்ளார்.

தொடர்ந்து சுருண்டு விழு ந்த அவர் அந்த பகுதியில் உயிருக்கு போராடினார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சுதன் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷம் குடித்ததை நண்பர்களுக்கு செல்போனில் தெரிவித்த கொத்தனார், சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்