பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-12 22:00 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் அழகியமணவாளன் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது 30). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராதிகாவை(28) காதலித்து திருமணம் செய்தார். சம்பவத்தன்று வெளியில் சென்றிருந்த சிலம்பரசன் வீட்டிற்கு திரும்பி வந்த பார்த்த போது, ராதிகாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிலம்பரசன், ராதிகாவை பல்வேறு இடங்ளில் தேடினார். ஆனால் எங்கு தேடியும், அவரை கண்டுபிடிக்க முடியாததால் சிலம்பரசன் இதுகுறித்து தூத்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்