நெய்வேலியில் வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

நெய்வேலியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-13 23:00 GMT
நெய்வேலி, 

நெய்வேலி 24-வது வட்டம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜகோபால்(வயது 55). இவருடைய மகன் அருண்பிரசாத்(22). சம்பவத்தன்று மதியம் இவர் தனது வீட்டில் உள்ள அறையில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அருண்பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி.பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருண்பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ராஜகோபால் டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பிரசாத் உடல்நலக்கோளாறு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்