கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

அரியலூர் கூட்டுறவு தணிக்கைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று தொடங்கியது.

Update: 2019-02-13 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் கூட்டுறவு தணிக்கைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் கூட்டுறவு தணிக்கைத்துறை இணை இயக்குனர் பாலசுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். உதவி இயக்குனர் காமராசு, சிறப்பு அழைப்பாளரான ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் ராஜேந்திரகுமார் மற்றும் கூட்டுறவு தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். நாளை(வெள்ளிக்கிழமை) வரை இந்த பயிற்சி நடக்கிறது. 

மேலும் செய்திகள்