மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Update: 2019-02-15 23:15 GMT
பேரையூர்,

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமிக்கு தற்போது 16 வயது ஆகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறாததால், அதன்பிறகு படிக்கவில்லை. வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றத்தை கண்ட அவருடைய தாயார் சந்தேகம் அடைந்தார். வயிற்றில் ஏதோ கட்டி வளரலாம் என அவருடைய குடும்பத்தினர் நினைத்தனர். பின்னர் சிறுமியை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது குறித்து அந்த சிறுமியிடம் விசாரித்தனர்.

பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் குழந்தைகள் நல குழுமத்தினர் வந்து சிறுமியிடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். சிறுமிக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் சேடபட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்