புவனகிரி அருகே, திருமணமான ஓராண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

புவனகிரி அருகே திருமணமான ஓராண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-17 23:00 GMT
புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள பூதவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரவீனா(வயது 19) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரவீனா கடந்த சில நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரவீனாவை மீட்டு சிகிச்சைக்காக புவனகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரவீனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பிரவீனாவின் தாய் ராசாத்தி புவனகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனா உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரவீனாவுக்கு திருமணமாகி ஓராண்டு ஆவதால், வரதட்சணை கொடுமையால் பிரவீனா தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து சப்-கலெக்டர் விசுமகாஜன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்