மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கொரடாச்சேரி அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-18 22:15 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பெருமாளகரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது55). விவசாய கூலித்தொழிலாளி. இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று ஆறுமுகம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரை அவரது மனைவி கண்டித்தார்.

இதில் மனமுடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார்.

இதுகுறித்து ஆறுமுகம் மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்