அரக்கோணம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

அரக்கோணம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-20 23:00 GMT

அரக்கோணம்,அரக்கோணம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் என்ற ராஜ் (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு முடித்த இளம்பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடத்தி சென்றார். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இளம்பெண்ணின் தாயார் மகள் காணவில்லை என்று அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பால்ராஜையும், இளம்பெண்ணையும் போலீசார் பிடித்தனர். பின்னர் இருவரையும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில் பால்ராஜ் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் பால்ராஜை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் அரக்கோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராணிப்பேட்டையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரணைக்கு பின்னர் இளம்பெண் தாயாருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்