முன்விரோதத்தில் பெண், அரிவாளால் வெட்டிக்கொலை ரவுடிக்கு போலீஸ் வலைவீச்சு

வேளாங்கண்ணி அருகே முன்விரோதத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ரவுடியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-02-20 22:15 GMT
வேளாங்கண்ணி,

நாகைமாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்குபொய்கைநல்லூரை சேர்ந்த குப்புசாமி மகன் திருட்டுகுமார் என்கிற கணேஷ்குமார்(வயது29). அதேபகுதியை சேர்ந்த சுப்பையா மகன் ஆனந்தவேலன்(30). இவரது மனைவி சரண்யா(28). இந்தநிலையில் கணேஷ்குமாருக்கும், ஆனந்தவேலனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று ஆனந்தவேலன் மனைவி சரண்யாவை கணேஷ்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வேளாங் கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை வெட்டிக் கொலைசெய்த கணேஷ்குமாரை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாாரணை நடத்தி வருகின்றனர். கணேஷ்குமார் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்