மணல் கடத்தல்; 5 பேர் கைது

மணல் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-02-20 20:48 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த மாகரல் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அரசாணைபாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 49), அதே பகுதியை சேர்ந்த எழிலரசன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

காக்களூர்

அதேபோல் திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு பதிவெண் இல்லாத மினி டெம்போவை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்தியதாக தண்ணீர்குளத்தை சேர்ந்த கார்த்திக் (25), பெருமாள் (29), சிவா (25) ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்