விளம்பர பதாகை வைப்பது தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் திருமானூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பர பதாகை வைப்பது தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-02-23 22:45 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் திருமானூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பர பதாகை வைப்பது தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் சாலை ஓரங்களில் விளம்பர பதாகை வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கட்சி ஒன்றிய செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்