கண்டமங்கலம் அருகே, தீயில் கருகி பெண் பலி

கண்டமங்கலம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உடல்கருகி உயிரிழந்தார்.

Update: 2019-02-25 23:00 GMT
விழுப்புரம்,

கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி (வயது 51). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவர் தனது மகன் ரஞ்சித் வீட்டின் பின்புற பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இவருடைய குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் மளமளவென தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இந்த தீ விபத்தில் விஜயலட்சுமி சிக்கிக்கொண்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியாததால் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வருவதற்குள் வீடு முழுவதுமாக தீயில் எரிந்தது. இதில் விஜயலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்