சங்கரன்கோவிலில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் பலி

சங்கரன்கோவிலில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் பலியானான்.

Update: 2019-02-25 21:45 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பாரதிநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத சிறுவன் பிணமாக கிடந்தான். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அந்த சிறுவனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பிணமாக கிடந்த சிறுவன் சங்கரன்கோவில் பாரதிநகரை சேர்ந்த அண்ணாத்துரை மகன் சுடலை (வயது 16) என்பதும், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. மேலும் சுடலை நீண்ட நாட்களாக இருதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் அடிபட்டு சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்