சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா அத்தியூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவன், அரியலூர் மாவட்டம் அயன்தத்தனூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அதற்கு துணையாக இருந்த சிறுவனின் தாய்மாமன் அருண்குமார்(வயது 31) மற்றும் சிறுவன் மீது குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா அத்தியூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவன், அரியலூர் மாவட்டம் அயன்தத்தனூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அதற்கு துணையாக இருந்த சிறுவனின் தாய்மாமன் அருண்குமார்(வயது 31) மற்றும் சிறுவன் மீது குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.