நிவாரணம் கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முறையாக வழங்கவில்லை எனவும், அனைவருக்கும் நிவாரண பொருட்கள், உதவித்தொகை வழங்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-10 22:30 GMT
கீரனூர்,

கஜாபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் முறையாக வழங்கவில்லை எனவும், அனைவருக்கும் நிவாரண பொருட்கள், உதவித்தொகை வழங்க கோரி கீரனூர் அருகே உள்ள செங்கனூர், மேலப்பட்டி, வடக்கிப்பட்டி, கண்ணாப்பட்டி, கட்டுக்கோபட்டி உள்பட 10 கிராமங்களை சேர்ந்து கிராம மக்கள் திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்