மாவட்ட இறகுப்பந்து போட்டி

பெரம்பலூரில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது.

Update: 2019-03-17 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளவர்களுக்கு இரட்டையர் பிரிவில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் இடம் பிடித்த அணிக்கு ரூ.3 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.2 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.ஆயிரமும் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் பெரம்பலூர் மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் தலைவர் டாக்டர் கிருபாகரன், செயலாளர் அரவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்