மண்டைக்காடு அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

மண்டைக்காடு அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-03-20 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு அருகே புதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குரூஸ் அந்தோணி (வயது 72), மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி சேசம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால், இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேசம்மாள் இறந்து விட்டார். இதனால், அவர் மனைவியின் தங்கையான சகாயமேரி வீட்டில் வசித்து வந்தார். முதுமையின் காரணமாகவும், மனைவி இறந்து விட்டதாலும், முதுமையில் இருக்கும் தன்னை கவனிக்க பிள்ளைகள் இல்லாததாலும் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய சகாயமேரி, குரூஸ் அந்தோணி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து மண்டைக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்