பீட் மாவட்டத்தில் காரில் ரூ.1½ கோடி பறிமுதல் : தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
மராட்டியத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஓட்டுக்கு பணம் கொடுப்பது போன்ற சம்பவங்களை தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மும்பை,
பீட் மாவட்டம் பந்தர்வாடி பாடா பகுதியில் போலீசாருடன், தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரில் 5 பைகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முறையான ஆவணம் இன்றி பணத்தை எடுத்து சென்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.