மகன், மகளை கொன்றுவிட்டு மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது

சென்னை வளசரவாக்கம், மகன், மகளை கொன்றுவிட்டு மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்துகொண்டார்.

Update: 2019-03-30 22:30 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராயலா நகர் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தாமரை(வயது 42). இவர், அரும்பாக்கத்தில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அபிதா(29). இவர்களுக்கு மகாலட்சுமி(7) என்ற மகளும், லட்சுமிநாராயணன் (10) என்ற மகனும் இருந்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்தகராறு காரணமாக மனம் உடைந்த அபிதா, தனது மகன் மற்றும் மகளை கொன்றுவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ராயலாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இது தொடர்பாக செந்தாமரை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அபிதாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், செந்தாமரை அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததும், அதனால் அபிதா இந்த முடிவை தேடிக்கொண்டதும் தெரிந்தது.

இதையடுத்து செந்தாமரை மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்