நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு 945 டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2019-04-01 22:15 GMT
நீடாமங்கலம்,

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவைக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், நவீன அரிசி ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு 945 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் இடையர்நத்தம் திறந்தவெளிசேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத்தொடர்ந்து சரக்கு ரெயில் நெல் மூட்டைகளுடன் தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்