எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படையினர்

எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எச்சரித்து அனுப்பினர்.

Update: 2019-04-04 23:00 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து பெருமாள்பேட்டை மற்றும் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 10-க்கும் மேற்பட்ட படகில் நேற்று முன்தினம் 40-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே நேற்று காலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர் களின் படகுகளை வழிமறித்தனர். இதனால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறியும், இந்த பகுதியில் மீன்பிடிக்க கூடாது எனவும் தமிழக மீனவர்களை எச்சரித்து இலங்கை கடற்படையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதை தொடாந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினர்.

மேலும் செய்திகள்