மன்னார்குடியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

மன்னார்குடியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-11 22:15 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காளவாய்கரை பகுதியை சேர்ந்தவர் கற்பகம் (வயது 35). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை மன்னார்குடியில் இருந்து தேவங்குடிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாஞ்சூர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கற்பகம் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதனால் ஸ்கூட்டரில் இருந்து கற்பகம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவ மனையில் சிசிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்