ரூ.3 கோடி வெளிநாட்டு பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

டாக்சியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடி வெளிநாட்டு பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வெளிநாட்டுக்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-04-12 23:06 GMT
மும்பை, 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை மாகிம் பகுதியில் போலீசார் உதவியுடன் பறக்கும்படை அதிகாரிகள் வாகனங்களில் சோதனை போட்டனர். இதில், ஒரு டாக்சியில் சோதனை போட்ட போது கத்தை, கத்தையாக வெளிநாட்டு பணம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவற்றின் இந்திய மதிப்பு ரூ.3 கோடி என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக டாக்சியில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் அப்சல் சலேம், ருபேஷ் பிரகாஷ், பார்பியா ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களில் பார்பியா வெளிநாட்டை சேர்ந்தவர் ஆவார்.

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தை யாரிடம் கொடுப்பதற்காக டாக்சியில் கொண்டு சென்றனர் என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்