தோகைமலை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தோகைமலை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-04-24 22:15 GMT
தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி மாகாளிபட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ரேணுகா (வயது 18). இவர் குளித்தலை அருகே சத்தியமங்களத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரேணுகாவிற்கு கடந்த 3 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வயிற்று வலிக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதேபோல் நேற்றும் அவர் வயிற்று வலியால் துடித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ரேணுகா வீட்டில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி கொண்டார். இதைக்கண்ட ரேணுகாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரேணுகாவை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரேணுகாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ரேணுகாவின் தந்தை பெருமாள் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ரேணுகா தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோகைமலை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்