சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-04-29 22:37 GMT
திருப்பூர்,

திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 49). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 8-7-2018 அன்று காலை அந்தப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து செல்போனில் படம் காட்டுவதாக அழைத்துள்ளார். பின்னர் தனது மடியில் அமர வைத்து அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தாள். சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுப்பிரமணியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சுப்பிரமணிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்