மனைவி,மகள்கள் இறந்ததால் மனவேதனை, விஷம் குடித்து விவசாயி தற்கொலை - போலீசார் விசாரணை

மனைவி, மகள்கள் இறந்ததால் மனவேதனை அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-10 22:30 GMT
வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மாளிகைதிடல் ஊராட்சி பனந்திடல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 38). விவசாயி. இவருடைய மனைவி கலையரசி, மகள்கள் ராசியா (4), லெட்சிதா (2). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி கலையரசி, மகள்கள் ராசியா,லெட்சிதா ஆகியோர் விஷம் குடித்து உயிரிழந்தனர். மனைவி, மகள்கள் இறந்ததால் ராஜசேகர் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜசேகர், வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வலங்கைான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி, மகள்கள் இறந்ததால் மனவேதனையில் இருந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்