மயிலம் அருகே, மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

மயிலம் அருகே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-11 22:15 GMT
மயிலம்,

மயிலம் அருகே உள்ள பெரமண்டூர் காலனியை சேர்ந்தவர் குபேரன். இவருடைய மகன் அஜித்குமார்(வயது 24). இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படித்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த அந்த மாணவியை அஜித்குமார், இவருடைய தம்பி ரஞ்சித்குமார்(20), நண்பரான குப்பன் மகன் சந்தோஷ்(21) ஆகிய 3 பேரும் சேர்ந்து கடத்திச் சென்ற னர். இதை தடுத்த மாணவியின் பெற்றோரை அவர்கள் தாக்கினர்.

இது குறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக ரஞ்சித்குமார், சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அஜித்குமாரையும், கடத்தப்பட்ட மாணவியையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்த அஜித்குமாரையும், மாணவியையும் போலீசார் பிடித்தனர். விசாரணையில் அஜித்குமார், அந்த மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்