டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2019-05-16 22:45 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அரசு மருத்துவமனை வளாகம் முன்பு நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சாபிகேசன், ஜாகீர்உசேன், அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன், தா.பழூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரதுறையினர், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்