தூத்துக்குடி அருகே சீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி அருகே சீரான குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-20 22:15 GMT
ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி மாநகராட்சி 52-வது வார்டுக்கு உட்பட்ட முத்தையாபுரம் பொன்னாண்டி நகரில் சுமார் 75 குடும்பங்கள் உள்ளன. இங்கு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 4-வது குடிநீர் குழாய் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பொன்னாண்டி நகரில் உள்ள 3-வது மற்றும் 4-வது தெருக்களில் தண்ணீர் வழங்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பலர் தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் சீரான குடிநீர் வழங்க கோரி திடீரென போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.

மேலும் செய்திகள்