திண்டிவனம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - வாலிபர் பலி

திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-05-22 22:45 GMT
திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த நாரேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதுரை மகன் வீரா(வயது 21). இவர் தனது அண்ணன் முருகனுடன்(23) சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து கார்பன்டர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வேளச்சேரியில் இருந்து நாரேரிகுப்பத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டினார். திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று, முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் வீரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான வீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்