சென்னை விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-24 22:30 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த சாவித் நீடன் (வயது 25) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள 725 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாவித் நீடனை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் யாருக்காக அந்த தங்கத்தை பாங்காக்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்