சகோதரிகள் மாயம்; போலீசார் விசாரணை

குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நதியாவும், அவருடைய தங்கையும் கடந்த 23–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை.

Update: 2019-05-25 22:15 GMT

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 50). இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகனும், நதியா(23) உள்பட 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நதியாவும், அவருடைய தங்கையும் கடந்த 23–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர், பிரகாஷ் ஆகியோர் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்