டயர் வெடித்ததால் சாலையோரம் கார் கவிழ்ந்தது 5 பேர் உயிர் தப்பினர்

வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கார் சென்றபோது முன்புறம் இடதுபுற டயர் திடீரென வெடித்து தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக் குப்புற கவிழ்ந்தது.

Update: 2019-05-26 22:30 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காரில் பட்டுக்கோட்டையை சேர்ந்த பக்கிரிசாமி மகன் சுகுமார் உள்பட 5 பேர் பயணம் செய்தனர். வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கார் சென்றபோது முன்புறம் இடதுபுற டயர் திடீரென வெடித்து தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைக் குப்புற கவிழ்ந்தது. கார் மோதிய வேகத்தில் மைல்கல் தூக்கி வீசப்பட்டது. காருக்குள் 5 பேரும் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். உடனே, அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை உயிருடன் மீட்டனர். அவர்களில் சுகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்