கன்டெய்னர் லாரி-கார் நேருக்கு நேர் மோதல் : ஒருவர் படுகாயம்

அரக்கோணம் அருகே கன்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-05-27 22:45 GMT

அரக்கோணம், 

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 27). இவர் காரில் அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தார். காஞ்சீபுரம்–அரக்கோணம் ரோட்டில் வந்தபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரியும், இவரது காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த விபத்தில் உமாபதி படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், மஞ்சுநாத் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்