திருச்சி விமான நிலையத்தில் ரூ.7½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையம் வழியாக கடந்த ஒரு மாதமாக தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2019-05-29 22:45 GMT
திருச்சி,

திருச்சி விமான நிலையம் வழியாக கடந்த ஒரு மாதமாக தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர்ஏசியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று காலை ஏர்ஏசியா விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த ஷேக்அப்துல்லா (வயது 37) என்பவர் தனது உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 305 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்