தனியார் வேலைவாய்ப்பு முகாம்; இன்று நடக்கிறது

வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

Update: 2019-05-30 22:15 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தனியார்துறை நிறுவனங்களும்-தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும். அதேபோல இந்த வாரத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடக்கிறது. எனவே தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை இம்முகாமில் தேர்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே தனியார்துறை பணிகளுக்கு செல்ல தகுதியானவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்