பூதப்பாண்டியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை

பூதப்பாண்டியில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் எலக்ட்ரீசியன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-02 23:00 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி, காட்டுபுதூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள் என்கிற பாபு (வயது 35). இவருடைய மனைவி சுபிலா (33). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், இதுவரை குழந்தைகள் இல்லை. இதனால், பாபு மனமுடைந்து காணப்பட்டார். அத்துடன், மது பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையில் வெறுப்புற்ற பாபு நேற்று முன்தினம் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாபு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார், பாபுவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்