திருச்சி விமான நிலையத்தில் ரூ.6¼ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6¼ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை.

Update: 2019-06-05 22:45 GMT
திருச்சி,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது ஈரோட்டைச் சேர்ந்த ஜெயபிரதா (வயது 39) என்பவர் தனது கைப்பையில் ரூ.6 லட்சத்து 33 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்க சங்கிலி மற்றும் வளையல் ஆகியவற்றை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்