மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு

மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-06-14 22:00 GMT

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பெருவேலி கிராமத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது18). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சசிகலா (27), வைதேகி (24). நேற்று முன்தினம் மாலை இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இதில் மின்னல் தாக்கி சவுமியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சசிகலா, வைதேகி இருவரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சித்தாமூர் போலீசார் சவுமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். காயம் அடைந்த பெண்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இறந்த சவுமியா பிளஸ்–2 முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.

மேலும் செய்திகள்