திருமணமான 8 மாதத்தில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

திருப்பூரில் திருமணம் முடிந்து 8 மாதத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-15 22:15 GMT
வீரபாண்டி,

திருப்பூர் தென்னம்பாளையம் பூம்புகார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 28). கவுண்டம்பாளையத்தில் பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகள் அருணி (வயது 19) என்ற பெண்ணை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் கடந்த 8 மாதங்களாக பூம்புகார் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுகாலை தனது கணவருடன் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் அருணி மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது.மேலும் வேலைக்குச் சென்ற சுபாஷ் மீண்டும் வீடு திரும்பி வரும் வருமாறு அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் கடுமையாக திட்டியதாக தெரிகிறது. மீண்டும் மதிய உணவு இடைவேளையின் போது சுபாஷ் வீடு சென்று கதவை தட்டியுள்ளார்.

அப்போது கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.மேலும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அருணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருணியினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலை கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்