2,981 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2019-07-14 22:30 GMT
பெரியபாளையம்,

பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு 2,981 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர்.

விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், ஆரணி கூட்டுறவு சங்க தலைவர் தயாளன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் பூபாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்