நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

Update: 2019-07-22 09:20 GMT
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் புதுடெல்லியில் செயல்படுகிறது. மத்திய அரசு கல்வி நிறுவனமான இதில் தற்போது பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 271 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பேராசிரியர் பணிக்கு 110 இடங்களும், இணை பேராசிரியர் பணிக்கு 157 இடங்களும், உதவி பேராசிரியர் பணிக்கு 4 இடங்களும் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி பேராசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் நெட், ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். பி.எச்.டி. படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் நகல் விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 19-8-2019-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nju.ac.in/career என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்