கணவர் கிரிக்கெட் விளையாட சென்றதால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவர் கிரிக்கெட் விளையாட சென்றதால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-07-22 22:30 GMT
சேலம், 

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த சுபிதா(வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கார்த்திக் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவதற்கு செல்வதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் கிரிக்கெட் விளையாடுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது அவரிடம் புதுப்பெண் சுபிதா, தனது பெற்றோர் வீட்டில் நடக்கும் கிடா விருந்துக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். ஆனால் கார்த்திக் கேட்காமல் கிரிக்கெட் விளையாட சென்றார்.

இதனால் மனமுடைந்த புதுப்பெண் சுபிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சுபிதாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சுபிதாவிற்கு திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் அவருடைய தற்கொலை குறித்து சேலம் உதவி கலெக்டர் மாறன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்