மொபட்டில் சென்ற கல்லூரி மாணவர் தாயுடன் பலி கார் மோதியது

கும்பகோணம் அருகே மொபட் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் தாயுடன் இறந்தார்.

Update: 2019-07-24 23:00 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுகா தியாகசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி கலையரசி (வயது 42). இவரது மகன் கிஷோர்(22). கிஷோர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கலையரசியும், கிஷோரும் நேற்று காலை மொபட்டில் கும்பகோணத்துக்கு சென்றுவிட்டு தியாகசமுத்திரத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மொபட்டை கலையரசி ஓட்டினார். தாராசுரம் - தஞ்சை மெயின் சாலையில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் கலையரசி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயமடைந்த கலையரசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிஷோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர் இறந்தார்.

இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். தாயும் மகனும் ஒரே நேரத்தில் விபத்தில் இறந்த சம்பவம் தியாகசமுத்திரம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்