புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம்

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம் முத்துப்பேட்டையில் நடந்தது.

Update: 2019-07-27 22:45 GMT
முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரைவு தேசிய புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது. பிரசாரத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கனகசுந்தரம், வீரமணி, வீரசேகரன், ராஜேந்திரன், மாதர் சங்க தலைவர் தேவகி, கிளை செயலாளர் காளிமுத்து ஆகியோர் வரைவு தேசிய புதிய கல்வி கொள்கை பாதிப்பு குறித்து பேசினர். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கையெழுத்து பெற்றனர். மேலும் ஆசாத்நகர், பெரியக்கடை தெரு, பேட்டை ஆகிய இடங்களில் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது.

மேலும் செய்திகள்